மேட்டுப்பாளையம் அருகே புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு - மண்ணெண்ணெய் கேனுடன் பாஜகவினர் தர்ணா!

மேட்டுப்பாளையம் அடுத்த எத்தப்பன் நகரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே புதிய கல்குவாரி அமைக்க தடை விதிக்க கோரி காரமடை நகராட்சி அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் பாஜகவினர் தர்ணா போராட்டம்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் தீக்குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன்நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள கரியமலை பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கரியமலை பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நபர்கள் துவங்கி உள்ளதாக தெரிகிறது.

இந்த கல்குவாரி அமைக்கபட்டால் குடியிருப்புகள் சேதம் அடையும் என்றும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக அந்த கல்குவாரி அமைய நகராட்சி அனுமதிக்க கூடாது எனக்கூறி பாஜகவினர் காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட பாஜகவின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் ராகவன் தலைமையில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.



இதையடுத்து அங்கு வந்த காரமடை போலீசார், பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...