தாராபுரம் அருகே பழனிக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

தாராபுரம் அருகே காங்கேயம் பிரிவு அருகே மினி டெம்போ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனிக்குச் சென்ற பாதயாத்திரை பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.



திருப்பூர்: பழனிக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருடன் அப்பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் பழனிக்குப் பாதயாத்திரையாகச் சென்று விட்டு 19ஆம் தேதி மினி டெம்போவில் எடப்பாடி செல்ல தாராபுரம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சௌந்தர்ராஜன் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.



காங்கேயத்திலிருந்து தாராபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து காங்கேயம் பிரிவு அருகே வந்த போது, மினி டெம்போ மீது மோதியது. இதில் சௌந்தர்ராஜன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.



உடன் வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...