உடுமலை தீயணைப்பு நிலையம் மேம்படுத்தப்படுமா? - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீயணைப்பு நிலையத்தை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு நிலையம் 1931 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான தீயணைப்பு நிலையம் ஆகும். உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுக்காவில் 72 ஊராட்சிகள் ஐந்து பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என அனைத்தும் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இரு தாலுக்காவிலும் நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், தீவன தொழிற்சாலைகள், காற்றாலைகள் என பல்வேறு வகையான தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன. அதேபோல, கரும்பு, மக்காசோளம் என தீ விபத்தால் பாதிக்கும் விவசாய சாகுபடியும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.



திண்டுக்கல் கோவை இரு மாவட்ட எல்லை வரை உடுமலை தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது. தற்பொழுது, உடுமலை தீயணைப்பு நிலையத்தில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது. அதுவும் பழைய வாகனமாக உள்ளதால் அடிக்கடி பழுதும் ஏற்பட்டுவிடுவதாகக் கூறப்படுகிறது.



மேலும் நீர் நிலைகள் அதிகம் உள்ளதால், மழை, வெள்ளக் காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்கான பைபர் படகுகள், கயிறு, மரம் அறுக்கும் இயந்திரம் என கூடுதல் வசதிகளை வழங்கி தீயணைப்பு நிலையத்தை மேம்படுத்துவதோடு, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் , கூடுதல் தீயணைப்பு வீரர்களையும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...