திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தீயணைப்பு நிலையத்தை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு நிலையம் 1931 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான தீயணைப்பு நிலையம் ஆகும். உடுமலை, மடத்துக்குளம் என இரு தாலுக்காவில் 72 ஊராட்சிகள் ஐந்து பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என அனைத்தும் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இரு தாலுக்காவிலும் நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், தீவன தொழிற்சாலைகள், காற்றாலைகள் என பல்வேறு வகையான தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன. அதேபோல, கரும்பு, மக்காசோளம் என தீ விபத்தால் பாதிக்கும் விவசாய சாகுபடியும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

திண்டுக்கல் கோவை இரு மாவட்ட எல்லை வரை உடுமலை தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது. தற்பொழுது, உடுமலை தீயணைப்பு நிலையத்தில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது. அதுவும் பழைய வாகனமாக உள்ளதால் அடிக்கடி பழுதும் ஏற்பட்டுவிடுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் நீர் நிலைகள் அதிகம் உள்ளதால், மழை, வெள்ளக் காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்கான பைபர் படகுகள், கயிறு, மரம் அறுக்கும் இயந்திரம் என கூடுதல் வசதிகளை வழங்கி தீயணைப்பு நிலையத்தை மேம்படுத்துவதோடு, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் , கூடுதல் தீயணைப்பு வீரர்களையும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு தாலுக்காவிலும் நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், தீவன தொழிற்சாலைகள், காற்றாலைகள் என பல்வேறு வகையான தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன. அதேபோல, கரும்பு, மக்காசோளம் என தீ விபத்தால் பாதிக்கும் விவசாய சாகுபடியும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
திண்டுக்கல் கோவை இரு மாவட்ட எல்லை வரை உடுமலை தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்குச் செல்ல வேண்டி உள்ளது. தற்பொழுது, உடுமலை தீயணைப்பு நிலையத்தில் ஒரே ஒரு தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளது. அதுவும் பழைய வாகனமாக உள்ளதால் அடிக்கடி பழுதும் ஏற்பட்டுவிடுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் நீர் நிலைகள் அதிகம் உள்ளதால், மழை, வெள்ளக் காலங்களில் மக்களை காப்பாற்றுவதற்கான பைபர் படகுகள், கயிறு, மரம் அறுக்கும் இயந்திரம் என கூடுதல் வசதிகளை வழங்கி தீயணைப்பு நிலையத்தை மேம்படுத்துவதோடு, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் , கூடுதல் தீயணைப்பு வீரர்களையும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.