மேட்டுப்பாளையம் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர் தர்ணா - பரபரப்பு!

கோவை மாவட்டம் மருதூர் ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக கட்டிட வரைபட அனுமதி வழங்குவதாக குற்றம்சாட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர் ஒருவர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சியில் மாதாந்திர மன்றக் கூட்டம் நடைபெற்றது. மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 23 தீர்மானங்கள் மன்ற ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு, விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் ரங்கநாதன் திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மருதூர் ஊராட்சியில் இதுவரை 46 பேருக்கு மன்ற ஒப்புதல் இன்றி ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு கட்டிட வரைமுறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறி கவுன்சிலர் ரங்கநாதன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனி ஒருவனாக அமர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அவர், தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என குற்றம்சாட்டினார்.

போராட்டம் குறித்து காரமடை காவல்துறை அதிகாரிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் அளிக்கபட்டது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கட்டிட வரைபட அனுமதி சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் புகாராக எழுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் ரங்கநாதன் போராட்டத்தை கைவிட்டார்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...