பல்லடம் கேத்தனூரில் மாரியம்மன், காசி விஸ்வநாதர் கோயில்கள் குடமுழுக்கு விழா - பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இரண்டு திருக்கோவில்களும் 36 வருடங்களுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.



கடந்த 30 ஆம் தேதி விநாயகர் வழிபாடு, நவகிரக ஹோமத்தோடு விழா தொடங்கி, யாகங்கள் நடத்தப்பட்டு, கலசாபிஷேகம், விநாயகர் பூஜை மற்றும் நேற்று திருமுறை பாராயணம், பூதசுத்தி புண்யாகம், யாகபூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.



இன்று காலை வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரின் மூலவர் சிலைகளுக்கும் கோவிலின் கோபுர கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவினை நடத்தி வைத்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், அடுத்த 48 நாட்களுக்கு வரம்தரும் மாரியம்மன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதருக்கு மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...