நீலகிரி சோலூர் பேரூராட்சியில் ரூ.28.45 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

சோலூர் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் 73 பயனாளிகளுக்கு ரூ.28.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


நீலகிரி: சோலூர் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊரட்டி கிராம சமுதாயக் கூடத்தில் மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பில் சாலை விபத்து நிவாரண உதவித்தொகையும், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை,

முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 20பயனாளிகளுக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.35,000 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளையும்,



தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.31 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்களையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15.32 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் உதவிகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பில் உதவித் தொகையினையும்,



மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.50,000 இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்திரத்தினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும்,



மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5.30லட்சம் மதிப்பில் இரும்பு பட்டறைக்கான தொழில் கருவி மற்றும் தச்சு வேலை புரிவதற்கான கருவிகளையும், சோலூர் பேரூராட்சி சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,௬௭௦ மதிப்பில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும்,



வேளாண் மற்றும் பொறியியல் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.16,000 மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரத்தினையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 2 பயனாளிக்கு ரூ.4,000 மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துகள் என 73 பயனாளிகளுக்கு 28.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...