நீலகிரி சோலூர் பேரூராட்சியில் ரூ.28.45 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

சோலூர் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் 73 பயனாளிகளுக்கு ரூ.28.45 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


நீலகிரி: சோலூர் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊரட்டி கிராம சமுதாயக் கூடத்தில் மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பில் சாலை விபத்து நிவாரண உதவித்தொகையும், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை,

முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 20பயனாளிகளுக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.35,000 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகளையும்,



தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.31 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்களையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15.32 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் உதவிகளையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பில் உதவித் தொகையினையும்,



மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.50,000 இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்திரத்தினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும்,



மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5.30லட்சம் மதிப்பில் இரும்பு பட்டறைக்கான தொழில் கருவி மற்றும் தச்சு வேலை புரிவதற்கான கருவிகளையும், சோலூர் பேரூராட்சி சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,௬௭௦ மதிப்பில் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்கான ஆணையினையும்,



வேளாண் மற்றும் பொறியியல் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.16,000 மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரத்தினையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 2 பயனாளிக்கு ரூ.4,000 மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துகள் என 73 பயனாளிகளுக்கு 28.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...