கோவை டூ சென்னைக்கு தொடர் சைக்கிள் பயணம் - கோவை கல்லூரி மாணவர் ஜீவா சாதனை!

கோவையில் இருந்து சென்னைக்கு நிற்காமல் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்த கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஜீவாவுக்கு கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.



கோவை: கோவையில் இருந்து சென்னைக்கு இடைநில்லாமல் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்த கல்லூரி மாணவர் ஜீவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவையை சேர்ந்த ஜீவா என்ற இளைஞர், தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த ஜீவாவுக்கு அதிக தூரம் சைக்கிளில் பயணிப்பது பொழுதுபோக்காக இருந்து வருகிறது.



இந்த நிலையில் ஜீவா கோவை முதல் சென்னை வரை இடைநில்லாமல் சைக்கிளில் பயணித்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி சரவணம்பட்டியில் காலை 4 மணிக்கு சைக்கிளில் புறப்பட்ட ஜீவா அடுத்த நாள் காலை 9:30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை வரை சென்றுள்ளார்.



சிக்னல்களில் காவல் துறை உதவியுடன் கடந்து சென்ற கல்லூரி மாணவர் ஜீவா இடைநில்லாமல் 520 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதை அங்கிகரித்த கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர், "நான் ஸ்டாப் சைக்கிளிங் ஆன் சிங்கிள் ஸ்பீடு ரைடர் எம் டி பி" சாதனையாளராக அங்கிகரித்து சான்றிதழ் வழங்கி மாணவர் ஜீவாவை கௌரவித்துள்ளனர்.

சைக்கிளிங்கை பொழுதுபோக்காக ஆரம்பித்த கல்லூரி மாணவர் ஜீவா வருங்காலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளிங் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...