உடுமலை அருகே சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பம் - அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மாற்ற கோரிக்கை

உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்துள்ள மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை - தாராபுரம் சாலையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை-தாராபுரம் சாலையின் ஓரத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தில் கான்கிரீட் உடைந்தும், வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், எப்போது விழுமோ என்ற அச்சத்துடனேயே பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்லும் சூழல் நிலவி வருகிறது.



அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் பொது மக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...