நீலகிரியில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உட்பட இருவர் கைது..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வீடு கட்ட அனுமதி சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.



நீலகிரி: கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீஜித். அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்.

இந்நிலையில், இவர்களிடம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிராமப்புற குடிசை மாற்று வீடு கட்டுவதற்காக கதவு எண் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், கதவு எண் வழங்காமல் தாமதித்து வந்ததுடன், அதற்காக 11,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டுமென ஸ்ரீஜித் கேட்டதாக கூறப்படுகிறது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் கலந்த 11,000 ரூபாயை கொடுத்து ஸ்ரீஜித்தின் உதவியாளர் ரமேஷிடம் கொடுக்க வைத்துள்ளனர்.



இந்நிலையில், ரமேஷ் பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...