கிணத்துக்கடவு அடுத்த கோவில்பாளையம் அருகே கடந்த 28ஆம் தேதி நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்த கனகராஜ் என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில்பாளையம் அடுத்த செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (68). இவரும் கோவை பி.என்.புதூர் பகுதி சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோர் கடந்த 28 ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் கோவை பொள்ளாச்சி சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது கோவில்பாளையம் அருகே சென்ற நிலையில், கனகராஜ் வளைவில் திரும்பிய போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் பலத்த காயமடைந்த கனகராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கனகராஜ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில்பாளையம் அடுத்த செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (68). இவரும் கோவை பி.என்.புதூர் பகுதி சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோர் கடந்த 28 ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் கோவை பொள்ளாச்சி சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது கோவில்பாளையம் அருகே சென்ற நிலையில், கனகராஜ் வளைவில் திரும்பிய போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதில் பலத்த காயமடைந்த கனகராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த கனகராஜ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.