கோவையில் போதை மாத்திரை விற்ற வாலிபரைத் தனிப்படை போலீசார் கைது செய்து, 46 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
கோவையில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான சுற்றிய வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் போதைப் பொருள் விற்று வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பெயர் நவ்சாத் என்பதும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும் அவரிடமிருந்து நைட்ரோஜன் உள்ளிட்ட 46 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.
போதைக்காக இந்த மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான சுற்றிய வாலிபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் போதைப் பொருள் விற்று வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பெயர் நவ்சாத் என்பதும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும் அவரிடமிருந்து நைட்ரோஜன் உள்ளிட்ட 46 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.
போதைக்காக இந்த மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.