கோவை எட்டிமடை பேரூராட்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

எட்டிமடை பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



கோவை: எட்டிமடை பேரூராட்சியில் அதிமுக,திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக கீதா உள்ளார். இந்நிலையில் வார்டு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது எட்டிமடை பேரூராட்சியில் போடப்பட்ட போர்வெல் மோட்டார் சரி செய்ய ரூ.1.5 லட்சம் என மூன்று மோட்டார்களுக்கு பணம் எடுத்துள்ளதாகவும், இதேபோல் பல்வேறு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முறையான வரவு, செலவு கணக்குகளை காட்ட வேண்டும் எனவும் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இம்மாதிரி போலி கணக்குகளை காட்டினால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் எனவும் எனவே முறையான கணக்குகளை காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



ஆனால் அதற்கு முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேரூராட்சித் தலைவர் கீதா நடந்து கொண்டதால், திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வரவு செலவு கணக்குகளை முறையாக காட்டாவிட்டால் வெளியேறப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.



இதனிடையே ஒரு சில வார்டுகளில் கவுன்சிலருக்கு தெரியாமல் பல்வேறு பணிகள் நடந்து வருவதாகவும், இது குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் அளிப்பதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து ஏழு கவுன்சிலர்களும் எந்தப் பணியாக இருந்தாலும் கவுன்சிலர்களுக்கு தெரியாமல் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கடிதம் ஒன்றை பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொடுத்தனர்.

ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் அதை வாங்க மறுத்ததால் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழு கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மதிய உணவையும் வரவழைத்து அலுவலகத்திலேயே உண்டபின் உரிய பதில் வராமல் இங்கிருந்து செல்லப் போவதில்லை என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...