வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி தாய், மகன் உயிரிழப்பு

வால்பாறை அருகே ஆற்றில் துணி துவைக்க சென்ற தாய் மற்றும் மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறை அருகே ஆற்றில் துணி துவைக்க சென்றபோது தண்ணிரில் அடித்து செல்லப்பட்ட மகனை காப்பாற்ற சென்ற தாயும் நீரில் மூழ்கி இருவரும் பலியாகினர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சேடல் டேம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தம்பதி சிவக்குமார்-முனிய செல்வி. இவர்களது மகன் சுஜித். சிவகுமார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.

இன்று அவர் கேரளாவிற்கு வாகனம் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் முனிய செல்வியும், மகன் சுஜித்தும் ஆற்றுக்கு துணி துவைக்க சென்று உள்ளனர்.

ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது மகன் சுஜித் தண்ணீரில் விளையாடிய போது தண்ணீரில் விழுந்து உள்ளார். மகன் விழுந்ததை பார்த்த முனிய செல்வி மகனை காப்பாற்றுவதற்காக இறங்கி உள்ளார்.

அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



சிறிது நேரம் பின்பு ஆற்றின் கரையோரம் துணி துவைக்கப்பட்டு உள்ளதை பார்த்த தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தண்ணீரில் இருவரும் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர்.



தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆற்றிற்கு துணி துவைக்க சென்று தண்ணீரில் மூழ்கி தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...