கோவை தடாகத்தில் கஞ்சா விற்ற 4 பேர் கைது - 7 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை பெரிய தடாகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் கைது.



கோவை: தடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று பெரியதடாகம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான பெரியதடாகம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.



கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார், ரூபன் பிரசிதன், ஹதீஸ் சாபிர் மற்றும் சிறுவன் உட்பட 4 நபர்களை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...