கோவை துடியலூரில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர், கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார்.


கோவை: துடியலூர் அருகே கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கூல் லிப் போதைப் பொருட்களை சிலர் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வெள்ளக்கிணர், கதிர்நாயக்கன்பாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் துடியலூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பெட்டிக்கடைகளில் விற்பனை செய்ததை உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக ரவீந்திரன், அசோக் குமார், ஜெயக்குமார், தன்ராஜ் என 4 பெட்டிக்கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 22 கூல் லிப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...