கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர், கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார்.
கோவை: துடியலூர் அருகே கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கூல் லிப் போதைப் பொருட்களை சிலர் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வெள்ளக்கிணர், கதிர்நாயக்கன்பாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் துடியலூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பெட்டிக்கடைகளில் விற்பனை செய்ததை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக ரவீந்திரன், அசோக் குமார், ஜெயக்குமார், தன்ராஜ் என 4 பெட்டிக்கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 22 கூல் லிப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கூல் லிப் போதைப் பொருட்களை சிலர் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வெள்ளக்கிணர், கதிர்நாயக்கன்பாளையம், இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் துடியலூர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பெட்டிக்கடைகளில் விற்பனை செய்ததை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக ரவீந்திரன், அசோக் குமார், ஜெயக்குமார், தன்ராஜ் என 4 பெட்டிக்கடை உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 22 கூல் லிப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.