பழனிக்கு பாதயாத்திரை - கோவையில் இருந்து துவங்கினார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்!

கோவையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையாக இன்று புறப்பட்டார். பாத யாத்திரையை மாநில தலைவர் அண்ணாமலை தொடக்கி வைத்தார்.



கோவை: பழனி முருகன் கோயில் பாதயாத்திரையை கோவை ஈச்சனாரி கோயிலில் இருந்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்.



கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பாதயாத்திரையை துவங்கினார்.

இதில் அவரது பெற்றோர்கள் கலந்துகொண்டு ஆசீர்வதித்தனர்.



மேலும் இந்நிகழ்வில் கோவை, திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டும் வெற்றிவேல் வீரவேல் முழக்கமிட்டும் வழி அனுப்பினர்.



இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாதயாத்திரை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இதில் வானதி சீனிவாசனுக்கு வேல் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...