திருப்பூரில் தமிழக - வடமாநில தொழிலாளர்கள் மோதல் சம்பவம் - பீகார் இளைஞர்கள் 2 பேர் கைது

திருப்பூரில் தமிழக வடமாநில தொழிலாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் கடந்த 26 ஆம் தேதி தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் ஒரு வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோ முற்றிலும் வதந்தி எனவும், தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் எனவும், அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் தவறாகப் பதிவிடுவோர் மீதும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருப்பூர் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்காக இரண்டு தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம்(27) என 2 பேரை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148(ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294(பி)- பொது இடத்தில் அவதூறாகப் பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...