திருப்பூரில் தமிழக - வடமாநில தொழிலாளர்கள் மோதல் சம்பவம் - பீகார் இளைஞர்கள் 2 பேர் கைது

திருப்பூரில் தமிழக வடமாநில தொழிலாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் கடந்த 26 ஆம் தேதி தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் ஒரு வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோ முற்றிலும் வதந்தி எனவும், தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் எனவும், அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் தவறாகப் பதிவிடுவோர் மீதும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருப்பூர் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்காக இரண்டு தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம்(27) என 2 பேரை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148(ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294(பி)- பொது இடத்தில் அவதூறாகப் பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...