முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனம் அருகே வந்த புலி - வீடியோ வைரல்

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தின் அருகே புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனத்தில் அருகே புலி செல்லும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. புலிகள் காப்பகம் சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.



அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் டிரக்கிங் அழைத்துச் சென்று வனப்பகுதியையும், வன விலங்குகளையும் காண்பித்து வருகின்றனர்.



இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல சுற்றுலா பணிகள் தெப்பக்காடு வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற போது புலி ஒன்று வாகனத்தின் மிக அருகிலேயே கம்பீரமாக நடந்து சென்றது.



இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.



இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...