கோவை சாய்பாபா கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்

மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவை சாய்பாபா கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.



கோவை: கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின், பழனி முருகன் கோவில் பாதயாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார்.

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து இன்று மாலை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளார்.



பாதயாத்திரையில் பாஜகவினர் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பாதயாத்திரை துவக்கி வைப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை வருகை தந்தார்.



இந்நிலையில் ஈச்சனாரி கோவிலுக்கு செல்லும் முன்பாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த சாய்பாபா கோவிலில் 20 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...