கோவை சாய்பாபா கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்

மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவை சாய்பாபா கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.



கோவை: கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின், பழனி முருகன் கோவில் பாதயாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார்.

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து இன்று மாலை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளார்.



பாதயாத்திரையில் பாஜகவினர் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பாதயாத்திரை துவக்கி வைப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை வருகை தந்தார்.



இந்நிலையில் ஈச்சனாரி கோவிலுக்கு செல்லும் முன்பாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த சாய்பாபா கோவிலில் 20 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...