கோவை சாய்பாபா கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்

மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவை சாய்பாபா கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.



கோவை: கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின், பழனி முருகன் கோவில் பாதயாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார்.

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து இன்று மாலை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளார்.



பாதயாத்திரையில் பாஜகவினர் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பாதயாத்திரை துவக்கி வைப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை வருகை தந்தார்.



இந்நிலையில் ஈச்சனாரி கோவிலுக்கு செல்லும் முன்பாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த சாய்பாபா கோவிலில் 20 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...