கிணத்துக்கடவு அருகே எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி வந்த கார் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.
கோவை: எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் நடந்த சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்-முத்துலட்சுமி தம்பதி. இவர்கள் கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் குடியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு எஸ். மேட்டுப்பாளையம் பிரிவில் கணவன், மனைவி இருவரும் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி வந்த கார் முனீஸ்வரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.