பொருளாதார மந்த நிலையால் ஆட்குறைப்பு அதிகரிக்கும் - கோவை தொழில் துறையினர் தகவல்!

பொருளாதார மந்த நிலையால் தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகரிக்கும் என்று கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: தொழில் நகரான கோவை உற்பத்தி, சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வறு மாநிலங்களை சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.



உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கம், இந்தியாவில் தென்பட தொடங்கியுள்ளதாகவும், இதனால் கோவை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகரிக்கும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது:

உலகளவில் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது தெரியவருகிறது. சந்தையில் மக்களின் வாங்கும் திறன் கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் வணிகம் மற்றும் அதை சார்ந்த செயல்பாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தித் துறையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் கடந்த பல மாதங்களாக 30 முதல் 40 சதவீதம் வரை பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்துக்குப்பின் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மந்தநிலையின் தாக்கம், கோவையில் இருக்கும். அதற்கு பின் நிலை சீரடைய வாய்ப்புள்ளது. ஆட்குறைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.



இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) கோவை மாவட்ட தலைவர் பிரசாந்த் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி ஆணைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இருப்பினும் அதிக வளர்ச்சி இருக்கும் என்ற நோக்கத்தில் தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களை குறைக்க நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும், என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...