உடுமலை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சி அளித்ததாகப் பரவிய தகவலையடுத்து, அங்கு பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

அவ்வையாரால் அகத்தியரிடம் அறிமுகம்பெற்ற வாய் பேச முடியாத ராமதேவன் என்ற சிறுவன் அகத்தியரின் சீடரானார். தன் சமயோசித புத்தியால் காசிவர்மன் என்ற மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை வெளியேற்றியதால் அவர் தேரையர் என்று அழைக்கப்பட்டார்.



பின்னர், அகத்திய முனிவரால் பேசும் திறன்பெற்று நீண்ட காலம் மருத்துவ சேவை செய்து தேரை சித்தர் என்று பெயர் பெற்று, பொதிகை சார்ந்த தோரணமலையில் ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் உடுமலை குட்டை திடலில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர், தேரை வடிவில் காட்சியளிப்பதாகவும், அவரை தரிசித்தால் நோய்கள் தீரும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அந்த கோவிலில் உள்ள முருகன் சிலையின் வேலுக்கு இடையில் நீண்ட நேரமாக அந்த தேரை அசையாமல் அமர்ந்திருந்தது.

இவ்வாறு தேரை சித்தர் அவ்வப்போது காட்சியளிப்பதாகவும் திடீரென்று மாயமாக மறைந்து விடுவதாகவும் கூறி பக்தர்கள் வழிபட்டனர். விஞ்ஞானம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில், சில நம்பிக்கைகள் மனிதர்களின் பல நோய்களுக்கு தீர்வாக இருப்பது வியப்புக்குரிய விஷயமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...