வால்பாறையில் மனிதநேய வார விழா கொண்டாட்டம் - பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் மனித நேய வார விழா நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலத்துறை சார்பாக பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதியில் இந்த விழா நடத்தப்பட்டது.



இதில், ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் பழங்குடியினர் பள்ளி என 9 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மனித நேயத்தை பற்றி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் 6 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் மக்கள் குறை திறப்பு முகாம் நடைபெற்றது.



வன பகுதியில் செல்ல சாலை வசதி வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டும்,பழங்குடி கிராமங்களுக்கு மின் இணைப்பு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சார் ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு அளித்தனர். பின்னர் பேசிய சார் ஆட்சியர், பழங்குடியின மக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும், என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...