வால்பாறையில் மனிதநேய வார விழா கொண்டாட்டம் - பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் மனித நேய வார விழா நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலத்துறை சார்பாக பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதியில் இந்த விழா நடத்தப்பட்டது.



இதில், ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் பழங்குடியினர் பள்ளி என 9 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மனித நேயத்தை பற்றி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் 6 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் மக்கள் குறை திறப்பு முகாம் நடைபெற்றது.



வன பகுதியில் செல்ல சாலை வசதி வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டும்,பழங்குடி கிராமங்களுக்கு மின் இணைப்பு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சார் ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு அளித்தனர். பின்னர் பேசிய சார் ஆட்சியர், பழங்குடியின மக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும், என்றார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...