கோவை வால்பாறை அருகே யானை பார்த்து பயந்து ஓடிய வடமாநில பெண் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் வடமாநில பெண் ஒருவர் விறகு எடுக்கச் சென்ற நிலையில் யானையைப் பார்த்து பயந்து ஓடிய போது கிழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் யானை பார்த்து தடுமாறியதில் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மதியம் 12 மணியளவில் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பெண்கள் விறகு எடுக்கச் சென்று உள்ளனர்.

அப்போது வனப்பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நின்று உள்ளது. யானையைப் பார்த்த அவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி வந்து உள்ளனர். இதில் லில்மானிகிஷ்கு என்பவர் கீழே விழுந்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சக பெண்கள் அவரை காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

உடலில் காயங்கள் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...