கோவை வால்பாறை அருகே யானை பார்த்து பயந்து ஓடிய வடமாநில பெண் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் வடமாநில பெண் ஒருவர் விறகு எடுக்கச் சென்ற நிலையில் யானையைப் பார்த்து பயந்து ஓடிய போது கிழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் யானை பார்த்து தடுமாறியதில் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மதியம் 12 மணியளவில் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பெண்கள் விறகு எடுக்கச் சென்று உள்ளனர்.

அப்போது வனப்பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நின்று உள்ளது. யானையைப் பார்த்த அவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி வந்து உள்ளனர். இதில் லில்மானிகிஷ்கு என்பவர் கீழே விழுந்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சக பெண்கள் அவரை காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

உடலில் காயங்கள் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...