கோவையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் மாயமான வடமாநில ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பட்டறையில் பணியாற்றி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் சுமார் 621 கிராம் எடையுள்ள தங்க நகைகளுடன் மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பியூஸ். இவருக்கு அதேபகுதியில் தங்க நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறையில் தங்க நகைகள் ஆர்டர் கொடுத்தால் டிசைன் டிசைனாக ஆபரணங்களை வடிவமைத்து தந்து வருகின்றனர்.

இந்நிலையில், பியூஸ் நடத்தி வரும், தங்க நகை பட்டறையில் மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசைன் என்பவரும் அந்த பட்டறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த சதாம் உசைன் பட்டறையில் செய்யப்பட்ட தங்க நகைகளை வேறு கடைக்கு எடுத்து சென்று ஃபினிஸிங் செய்த பின் நகைகளை பெற்று பட்டறையில் ஒப்படைப்பதே அவரது வேலையாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, பட்டறையில் இருந்து எடுத்து சென்ற நகைகளை ஃபினிஷிங் செய்யும் இடத்தில் கொடுத்துவிட்டு வாங்கிச் சென்ற அவர், மீண்டும் பட்டறை உரிமையாளரிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையடுத்து சதாம் உசைன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது ஆள் இல்லை அவரது பை மட்டும் இருந்துள்ளது.

நண்பர்களிடம் விசாரித்த போது, சதாம் உசைன் தங்குகின்ற அறைக்கு வரவே இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த பட்டறை உரிமையாளர் பியூஸ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சதாம் உசைன் 621.660 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றதாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் எடுத்து சென்ற தங்க நகைகளின் மதிப்பு ரூ.24.86 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார்.

தங்க நகை பட்டறையின் முன்னாள் ஊழியர் ஒருவரின் தவறான வழி காட்டுதலின் அடிப்படையில் நம்பிக்கையை ஏற்படுத்த நல்லவனாக நடித்து தங்க நகைகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

தங்க நகை பட்டறையில் பணியாற்றும் வட மாநில வாலிபர்கள் தங்க நகைகளை திருடிக்கொண்டு ஓடும் சம்பவங்கள் கோவையில் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...