பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜை: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு

கோவை பொள்ளாச்சியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று வழிபாடு.


கோவை: தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளன.



இந்நிலையில், மாணவ, மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டியும், ஞாபகத்திறன் அதிகரித்து சிறந்த முறையில் தேர்வு எழுதி எல்.கே.ஜி முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என வேண்டியும் பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



இதில், மாணவ-மாணவிகள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்து ஹயக்ரீவர் மந்திரங்களை கூட்டாக படித்தனர்.



இந்த சிறப்பு வழிபாட்டில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...