பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜை: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு

கோவை பொள்ளாச்சியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று வழிபாடு.


கோவை: தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளன.



இந்நிலையில், மாணவ, மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டியும், ஞாபகத்திறன் அதிகரித்து சிறந்த முறையில் தேர்வு எழுதி எல்.கே.ஜி முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என வேண்டியும் பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



இதில், மாணவ-மாணவிகள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்து ஹயக்ரீவர் மந்திரங்களை கூட்டாக படித்தனர்.



இந்த சிறப்பு வழிபாட்டில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...