உடுமலையில் விவசாய கண்காட்சி: கோவை வேளாண் மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் கோவை வேளாண் கல்லூரி மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பார்வையாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் விவசாய கண்காட்சி நேற்றைய தினம் (28.01.2023) தொடங்கியது.



வரும் 30ஆம் தேதி வரை இந்த விவசாய கண்காட்சியானது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர்கள் அபிஷேக், அருண், அஸ்வின், இலியாஸ்,மௌலி தர்ஷன் மற்றும் நந்த குமார் ஆகியோர் கண்காட்சியில் பொருள் விளக்க செயலில் ஈடுபட்டனர்.



இந்த கண்காட்சியில் மல்பெரி மற்றும் எரி பட்டுப்புழு வளர்ப்பு, மானிய திட்டங்கள் மற்றும் மல்பெரி பழச்சாறு, ஜாம், கூட்டுப் புழு சோப்பு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



பட்டுப்புழுவியல் துறை தலைவர் மற்றும் உதவி இயக்குநர் மனிஷா ஆகியோரின் ஆலோசனையின்படி எரி பட்டுப்புழு வளர்ப்பு குறித்த சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளனர். இந்தக் கண்காட்சியை பட்டுப்புழு மற்றும் வேளாண்மை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...