உடுமலையில் விவசாய கண்காட்சி: கோவை வேளாண் மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் கோவை வேளாண் கல்லூரி மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பார்வையாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் விவசாய கண்காட்சி நேற்றைய தினம் (28.01.2023) தொடங்கியது.



வரும் 30ஆம் தேதி வரை இந்த விவசாய கண்காட்சியானது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர்கள் அபிஷேக், அருண், அஸ்வின், இலியாஸ்,மௌலி தர்ஷன் மற்றும் நந்த குமார் ஆகியோர் கண்காட்சியில் பொருள் விளக்க செயலில் ஈடுபட்டனர்.



இந்த கண்காட்சியில் மல்பெரி மற்றும் எரி பட்டுப்புழு வளர்ப்பு, மானிய திட்டங்கள் மற்றும் மல்பெரி பழச்சாறு, ஜாம், கூட்டுப் புழு சோப்பு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



பட்டுப்புழுவியல் துறை தலைவர் மற்றும் உதவி இயக்குநர் மனிஷா ஆகியோரின் ஆலோசனையின்படி எரி பட்டுப்புழு வளர்ப்பு குறித்த சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளனர். இந்தக் கண்காட்சியை பட்டுப்புழு மற்றும் வேளாண்மை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...