சிறுமுகை அருகே சாலையை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

சிறுமுகை அருகே விஸ்கோஸ் ஆலை முன்பு சாலையில் வாகனங்களை வழிமறித்த நின்ற காட்டுயானையால் பரபரப்பு.



கோவை: சிறுமுகை அருகே வெகுநேரமாகச் சாலையின் நடுவே யானை நின்று கொண்டு வாகனங்கள் செல்ல வழிவிடாமல் அங்கும் இங்கும் உலாவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே செயல்படாத விஸ்கோஸ் ஆலை உள்ளது. இந்த ஆலை செயல்படாமல் கடந்த சில ஆண்டுகளாக மூடி கிடப்பதால் வளாகம் முழுவதும் மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போல் காட்சி அளிக்கிறது.

மேலும் இந்த ஆலையை ஒட்டி பவானி ஆறு உள்ளதால், காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆலையில் முகாமிட்டுள்ளன.இப்படி முகாமிட்டுள்ள காட்டு யானைகள் அவ்வப்போது சிறுமுகை அருகே உள்ள திருவள்ளுவர் நகர்,ரேயான் நகர்,பழத்தோட்டம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வருகிறது.



இந்நிலையில் இன்றிரவு விஸ்கோஸ் ஆலை முன்பு உள்ள மேட்டுப்பாளையம் சத்தி பிரதான சாலையின் நடுவே காட்டுயானை நின்றது. வெகுநேரமாகச் சாலையின் நடுவே நின்றதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.

இதனையடுத்து ஒரு வழியாகக் காட்டு யானை அங்கு இருந்து சென்ற நிலையில் மீண்டும் வாகன ஒட்டிகள் அங்கிருந்து சென்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...