மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் சூரிய ஜெயந்தி வைபவம்!

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், ரத சப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வைபவம் மற்றும் சூரிய ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.

ரதசப்தமியை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் சூரிய பிரபை புறப்பாடு நடத்தப்பட்டு சூரியனுக்கு விசேஷ ஆர்த்தி நடைபெற்றது.

தொடர்ந்து மலையப்ப சாமி சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், அனுமந்த வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.



முன் மண்டபத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஒவ்வொரு வாகனங்களிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது பக்தர்கள் பேரீட்சை, அவல், பழங்கள் போன்றவற்றை தீபத்துடன் தட்டில் எடுத்து சுவாமிக்கு காணிக்கையாக அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு, கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பியவாறு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...