மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி கோயிலில் சூரிய ஜெயந்தி வைபவம்!

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா, சூரிய ஜெயந்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், ரத சப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வைபவம் மற்றும் சூரிய ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.

ரதசப்தமியை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இன்று காலை சிறப்பு யாகம் மற்றும் சூரிய பிரபை புறப்பாடு நடத்தப்பட்டு சூரியனுக்கு விசேஷ ஆர்த்தி நடைபெற்றது.

தொடர்ந்து மலையப்ப சாமி சேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், அனுமந்த வாகனம், போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.



முன் மண்டபத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஒவ்வொரு வாகனங்களிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது பக்தர்கள் பேரீட்சை, அவல், பழங்கள் போன்றவற்றை தீபத்துடன் தட்டில் எடுத்து சுவாமிக்கு காணிக்கையாக அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு, கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பியவாறு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Newsletter

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...