75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி கோவை சிறையில் இருந்த 13 கைதிகள் விடுதலை

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்த 60 கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை. கோவை சிறையில் இருந்து ஒரு பெண் உட்பட 13 பேர் விடுதலை.


கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி கோவை உள்பட தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் உள்ள தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.



இந்நிலையில், தமிழக சிறை துறை டி.ஐ.ஜி. அம்ரேஷ் புஜாரி உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் இருந்து 11 கைதிகள், வேலூர் மத்திய சிறையில் இருந்து 9 பேரும், கடலூர் சிறையில் இருந்து 12 பேரும், திருச்சி சிறையில் இருந்து 9 பேரும், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இதேபோல், மதுரை சிறையில் இருந்து ஒருவரும், பாளையங்கோட்டை சிறையில் இருந்து 4 பேரும், புழல் பெண்கள் சிறையில் இருந்து ஒருவரும், கோவை பெண்கள் சிறையில் இருந்து ஒருவரும் என மொத்தம் 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்டவர்களில் யாரும் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர் இல்லை என்றும், 66 சதவீத சிறை தண்டனையை அனுப்பித்தவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதலையாகி வெளியே சென்றவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவன பங்களிப்போடு இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...