75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி கோவை சிறையில் இருந்த 13 கைதிகள் விடுதலை

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்த 60 கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை. கோவை சிறையில் இருந்து ஒரு பெண் உட்பட 13 பேர் விடுதலை.


கோவை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி கோவை உள்பட தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் உள்ள தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.



இந்நிலையில், தமிழக சிறை துறை டி.ஐ.ஜி. அம்ரேஷ் புஜாரி உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் இருந்து 11 கைதிகள், வேலூர் மத்திய சிறையில் இருந்து 9 பேரும், கடலூர் சிறையில் இருந்து 12 பேரும், திருச்சி சிறையில் இருந்து 9 பேரும், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இதேபோல், மதுரை சிறையில் இருந்து ஒருவரும், பாளையங்கோட்டை சிறையில் இருந்து 4 பேரும், புழல் பெண்கள் சிறையில் இருந்து ஒருவரும், கோவை பெண்கள் சிறையில் இருந்து ஒருவரும் என மொத்தம் 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்டவர்களில் யாரும் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர் இல்லை என்றும், 66 சதவீத சிறை தண்டனையை அனுப்பித்தவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதலையாகி வெளியே சென்றவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவன பங்களிப்போடு இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...