பழைய 4 சக்கர வாகன விற்பனையாளர்களுடன் கோவை போலீசார் கலந்துரையாடல்

கோவையில் பழைய நான்கு சக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்துரையாடல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவையில் கடந்த தீபாவளி முதல் நாள், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தை, தொடர்ந்து என்.ஐ.ஏ வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், பழைய கார் விற்பனையகத்திலிருந்து வாங்கியது தெரியவந்தது. இதனால் ஏற்கனவே மாநகர போலீசார் பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் உரிமையாளர்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகரில் உள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் கடை உரிமையாளர்களுடன் மாநகர போலீசார் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் பழைய வாகனங்களின் முழுமையான சான்றிதழ்களை சரிபார்த்து வாங்க வேண்டும். சந்தேகப் படும்படியான வாகனங்கள் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.

மேலும், இந்த பணிகளில் என்னென்ன சிக்கல் உள்ளது என்பது குறித்தும் பழைய வாகன விற்பனையாளர்களிடம் போலீசார் கேட்டறிந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...