பழைய 4 சக்கர வாகன விற்பனையாளர்களுடன் கோவை போலீசார் கலந்துரையாடல்

கோவையில் பழைய நான்கு சக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்துரையாடல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவையில் கடந்த தீபாவளி முதல் நாள், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தை, தொடர்ந்து என்.ஐ.ஏ வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், பழைய கார் விற்பனையகத்திலிருந்து வாங்கியது தெரியவந்தது. இதனால் ஏற்கனவே மாநகர போலீசார் பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் உரிமையாளர்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகரில் உள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் கடை உரிமையாளர்களுடன் மாநகர போலீசார் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் பழைய வாகனங்களின் முழுமையான சான்றிதழ்களை சரிபார்த்து வாங்க வேண்டும். சந்தேகப் படும்படியான வாகனங்கள் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.

மேலும், இந்த பணிகளில் என்னென்ன சிக்கல் உள்ளது என்பது குறித்தும் பழைய வாகன விற்பனையாளர்களிடம் போலீசார் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...