பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு மேள தாளம் முழங்க சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்

பல்லடம் அடுத்த சேடபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் 73ஆம் ஆண்டு விழாவையொட்டி பள்ளிக்கு தேவையான பொருட்களை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்ற பொதுமக்கள்.



திருப்பூர்: பல்லடம் அருகே சேடபாளையம் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வழங்கினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட சேடபாளையம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியின், 73வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மின்விசிறி, சேர்கள், குடங்கள், குப்பை தொட்டி, பேப்பர் பண்டல் உள்ளிட்டவற்றை கிராம மக்கள் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களுடன் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒன்று கூடினர். இதனையடுத்து பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பள்ளியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் பெண்கள் முன்னே செல்ல பள்ளிக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பின்னால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.



அத்தியாவசிய பொருட்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு வந்த பொதுமக்களை தலைமை ஆசிரியை ரெஜினா மேரி மற்றும் சக ஆசிரியர்கள் வரவேற்று உபசரித்தனர். இதையடுத்து பள்ளிக்கு வழங்கிய பொருட்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...