திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் - ரூ.74.39 லட்சம் விற்பனை

திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில், 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி ரூ.74.39 லட்சத்துக்கு வியாபாரிகள் ஏலம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது.

இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த 327 விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடைபெற்ற இந்த மறைமுக ஏலத்தில் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், பங்கேற்றனர்.

இந்த மறைமுக ஏலத்தில் பருத்திக்கான அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,662-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், குறைந்தபட்ச விலையாக ரூ.6,400க்கும், சராசரி விலை ரூ.7,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலத்தில், 2945 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 970.76 குவிண்டால் அளவிலான பருத்தி, 74 லட்சத்து 39ஆயிரத்து 959 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த மறைமுக ஏலத்தில் 9 வியாபாரிகள் கலந்து கொண்டதாக திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...