தாராபுரத்தில் பராமரிக்கப்படாத 2,250 கிலோ நெல் விதைகளை விற்க தடை!

தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, முறையாக பராமரிக்கப்படாத 2,250 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனையகங்கள், விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி ஆய்வு செய்தார்.

அப்போது விற்பனை உரிமம், இருப்பு மற்றும் விலை விவர பலகை, கொள்முதல் பட்டியல், பதிவேடுகள், பதிவுச் சான்றிதழ், முளைப்பு திறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களில் ஆய்வு செய்த போது, விதை இருப்பிற்கும், பதிவேடு இருப்பிற்கும் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.72 ஆயிரம் மதிப்பிலான 2,250 கிலோ எடை அளவிலான நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளுக்கு பட்டத்திற்கு (காலம்) ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆய்வின் போது தாராபுரம் மற்றும் காங்கயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...