ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுங்கள்..! - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட கோரி திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை - திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேம்பாலம் கடந்த ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த மேம்பாலத்திற்கு எந்த பெயரும் வைக்காததால், தற்போது “கலைஞரின் தமிழ்நாடு மேம்பாலம்” என்ற பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

அவர் இங்கிருக்கும் போது திரைப்படங்களுக்கான வசனங்கள், அரசியல் முன்னெடுப்புகள் ஆகியவை இங்கிருந்து தான் துவங்கியது. ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் வரை வழக்கமாக அவர் நடந்து செல்லும் வழியாக இருந்தது.

மேலும் பல்வேறு திட்டங்களை அவர் முதல்வராக இருந்தபோது கோவைக்கு வழங்கி உள்ளார். எனவே தற்போது அவர் வாழ்ந்த இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...