ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுங்கள்..! - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட கோரி திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை - திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேம்பாலம் கடந்த ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த மேம்பாலத்திற்கு எந்த பெயரும் வைக்காததால், தற்போது “கலைஞரின் தமிழ்நாடு மேம்பாலம்” என்ற பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

அவர் இங்கிருக்கும் போது திரைப்படங்களுக்கான வசனங்கள், அரசியல் முன்னெடுப்புகள் ஆகியவை இங்கிருந்து தான் துவங்கியது. ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் வரை வழக்கமாக அவர் நடந்து செல்லும் வழியாக இருந்தது.

மேலும் பல்வேறு திட்டங்களை அவர் முதல்வராக இருந்தபோது கோவைக்கு வழங்கி உள்ளார். எனவே தற்போது அவர் வாழ்ந்த இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...