திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை: உடுமலையில் உள்ள ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில் நிலையம் அமைந்தள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச் செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்த புரம் - மதுரை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

உடுமலை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். ஆனால், ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்கும், முன்பதிவு செய்வதற்கும் என ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அவசரமாக வரும் ரயில் பயணிகள் விரைந்து டிக்கெட் எடுக்க முடிவதில்லை. மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் விரைந்து டிக்கெட்டுகளை கொடுக்க முடியாத நிலை அதிகாரிகளுக்கும் ஏற்படுகிறது. இதனால், காலவிரையம் ஆவதோடு, பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகுகிறது.
எனவே, பயணிகளின் நலன்கருதி, உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் அமைக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில் நிலையம் அமைந்தள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - திருச் செந்துார், பாலக்காடு - சென்னை, திருவனந்த புரம் - மதுரை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
உடுமலை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். ஆனால், ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்கும், முன்பதிவு செய்வதற்கும் என ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அவசரமாக வரும் ரயில் பயணிகள் விரைந்து டிக்கெட் எடுக்க முடிவதில்லை. மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் விரைந்து டிக்கெட்டுகளை கொடுக்க முடியாத நிலை அதிகாரிகளுக்கும் ஏற்படுகிறது. இதனால், காலவிரையம் ஆவதோடு, பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகுகிறது.
எனவே, பயணிகளின் நலன்கருதி, உடுமலை ரயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் அமைக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.