திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை: உடுமலை அருகே மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கைஎழில் நிறைந்த பாதுகாக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.
வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கிடைக்கிறது. ஆனாலும், கோடை காலம் மற்றும் அதன் தொடக்கத்தில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடிக்கொண்டு மலையின் அடிவாரப் பகுதிக்கு வருவது அடிக்கடி நிகழ்ந்துவருகிறது.
அந்த வகையில், அடிவாரப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்துவருகிறது. கடந்த சில நாட்களாக உடுமலை கல்லாபுரம் பகுதியில் அடிவார பகுதிக்கு திடீரென யானைகள் கூட்டமாக வந்து செல்கிறது.

அப்போது பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தும் யானைக்கூட்டம், திரும்பவும் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கைஎழில் நிறைந்த பாதுகாக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.
வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கிடைக்கிறது. ஆனாலும், கோடை காலம் மற்றும் அதன் தொடக்கத்தில் இருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடிக்கொண்டு மலையின் அடிவாரப் பகுதிக்கு வருவது அடிக்கடி நிகழ்ந்துவருகிறது.
அந்த வகையில், அடிவாரப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்துவருகிறது. கடந்த சில நாட்களாக உடுமலை கல்லாபுரம் பகுதியில் அடிவார பகுதிக்கு திடீரென யானைகள் கூட்டமாக வந்து செல்கிறது.
அப்போது பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தும் யானைக்கூட்டம், திரும்பவும் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.