கோவை அருகே விவசாய தோட்டத்தில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை - வைரலாகும் வீடியோ!

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவனூர் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டுயானை 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரியும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலை வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகளில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில், நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ள கோவனூர் பகுதியில் ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது.



அங்கிருந்த குணா என்பவரது தோட்டத்திற்குள் இரவில் புகுந்த அந்த ஒற்றைக் காட்டுயானை, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரிவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...