கோவை அருகே விவசாய தோட்டத்தில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை - வைரலாகும் வீடியோ!

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவனூர் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டுயானை 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரியும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஒற்றை யானை புகுந்து 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாலமலை வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகளில் சில யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.



இந்த நிலையில், நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ள கோவனூர் பகுதியில் ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது.



அங்கிருந்த குணா என்பவரது தோட்டத்திற்குள் இரவில் புகுந்த அந்த ஒற்றைக் காட்டுயானை, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றது. காட்டு யானை தோட்டபகுதிக்குள் சுற்றித் திரிவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...