திருப்பூரில் 19ஆவது புத்தக திருவிழா தொடக்கம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பாக 19ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைப்பு.


திருப்பூர்: திருப்பூரில் 19ஆவது புத்தக திருவிழா தொடங்கியது. இது 10நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில் 19ஆவது புத்தகத் திருவிழா காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் உணவகத்தில் இன்று துவங்கியது.



செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் புத்தக திருவிழாவைத் துவக்கி வைத்தனர். இதில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் பங்கேற்றனர்.



வரும் பிப்.5ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 150 அரங்குகளில் 126 புத்தக விற்பனை அரங்குகள் மற்றும் 24 அரசுத்துறை சார்ந்த அரங்குகள் இடம் பெற்று உள்ளன.



புத்தக விழாவில் சாகித்ய அகாடமி, என்.சி.பி.எச், காலச்சுவடு, கிழக்கு, கௌரா, விகடன், பாரதி, விஜய பாரதம், விஜயா, தமிழினி, உயிர்மை, பெரியார் சுயமரியாதை, அறிவியல் பலகை, ஆரோக்கியா புக்ஸ், சூரியன் பதிப்பகம், இந்து தமிழ் திசை, சக்சஸ் புக்ஸ், புக் வேர்ல்ட், புக்பார் சில்ட்ரன் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் பதிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.



புத்தக திருவிழாவில் வாங்கும் புத்தகங்கள் அனைத்துக்கும், குறைந்தபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.



ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவிகள் குலுக்கல் முறையில் 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...