திருப்பூரில் 19ஆவது புத்தக திருவிழா தொடக்கம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பாக 19ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைப்பு.


திருப்பூர்: திருப்பூரில் 19ஆவது புத்தக திருவிழா தொடங்கியது. இது 10நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில் 19ஆவது புத்தகத் திருவிழா காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் உணவகத்தில் இன்று துவங்கியது.



செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் புத்தக திருவிழாவைத் துவக்கி வைத்தனர். இதில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் பங்கேற்றனர்.



வரும் பிப்.5ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 150 அரங்குகளில் 126 புத்தக விற்பனை அரங்குகள் மற்றும் 24 அரசுத்துறை சார்ந்த அரங்குகள் இடம் பெற்று உள்ளன.



புத்தக விழாவில் சாகித்ய அகாடமி, என்.சி.பி.எச், காலச்சுவடு, கிழக்கு, கௌரா, விகடன், பாரதி, விஜய பாரதம், விஜயா, தமிழினி, உயிர்மை, பெரியார் சுயமரியாதை, அறிவியல் பலகை, ஆரோக்கியா புக்ஸ், சூரியன் பதிப்பகம், இந்து தமிழ் திசை, சக்சஸ் புக்ஸ், புக் வேர்ல்ட், புக்பார் சில்ட்ரன் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் பதிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.



புத்தக திருவிழாவில் வாங்கும் புத்தகங்கள் அனைத்துக்கும், குறைந்தபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.



ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவிகள் குலுக்கல் முறையில் 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...