'கிரைண்டருக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும்..!' - கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு!

ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.



கோவை: நாட்டின் மொத்த கிரைண்டர் தேவையில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன. தவிர, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட இந்தியர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்கு கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நேரடியாகவும் மறைமுகமாகவும் கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தினசரி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(கவுமா) தலைவர் சவுந்தரகுமார் கூறியதாவது:



கிரைண்டர்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து கடந்த சில மாங்களுக்கு முன்பு திடீரென 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கிரைண்டர்களின் விலையும் அதிகரித்துள்ளது.

தினமும் கோவை மாவட்டத்தில் 5,000 கிரைண்டர்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது 1,000 கிரைண்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

சந்தையில் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும்மேல் ரெடிமேட் இட்லி, தோசை மாவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் குடிசை தொழில்கள் அதிகரித்துள்ளன. இவை காரணமாக வீட்டு பயன்பாடுக்கான கிரைண்டர் பயன்பாடு குறைந்துள்ளது.

தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. எதிர்வரும் மத்திய நிதிநிலை அறிக்கையில் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்கவும், மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறு மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...