'ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு' - கோவை தொழில் அமைப்புகள் கோரிக்கை

மத்திய நிதிநிலை அறிக்கையில் 'ஜாப் ஒர்க்' மட்டும் பெற்று தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேலிடம் கேட்டபோது,



வேளாண் துறையில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுவதைப்போல, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு 6 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட வேண்டும். தனி நபர் வருமானவரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.

ஜிஎஸ்டி திட்டத்தில் 5 மற்றும் 12 சதவீதம் என இரு வகையான வரி விதிப்பு மட்டுமே அமலில் இருக்க வேண்டும். ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார்.

கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் (கொசிமா) தலைவர் நல்லதம்பியிடம் பேசியபோது,



இயந்திரம் வாங்குவதற்கு முன்பு வழங்கப்பட்டுவந்த மானியம் 2020-ம் ஆண்டுக்குபின் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஜாப் ஒர்க்’ செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு திட்டத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.

வங்கிகளில் நடப்பு மூலதன கடன்களுக்கு ஏற்கெனவே அறிவித்த 2 சதவீத வட்டி மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருடாந்திர விற்பனை அடிப்படையில் 25 சதவீதம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு சிறப்பு மானியம் வழங்கவேண்டும், என்றார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...