மேட்டுப்பாளையத்தில் கோழியால் வந்த சண்டை - பெண் தற்கொலை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கோழியால் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனையால், மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேட்டுப்பாளையம்: கோழியால் ஏற்பட்ட பிரச்சினையில் பெண் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் டெய்சி. குடும்பத்துடன் அங்கு வசித்து வரும் டெய்சி, வீட்டில் கோழிகளை வளர்த்துவந்துள்ளார்.

இந்தநிலையில், டெய்சியின் கோழி வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டிருந்தபோது, சிறுவர்கள் அங்கு விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது, டெய்சி தள்ளி சென்று விளையாடுமாறு அந்தச் சிறுவர்களைக் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ள சிலருடன் டெய்சிக்கு பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது.



இரு தரப்பிடையே தகராறு முற்றிய நிலையில், பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் டெய்சியை தாக்கியதாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த டெய்சி தனது வீட்டினுள் சென்று வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குத்தானே கொழுத்திக் கொண்டார். இதில் படுகாயமடைந்த டெய்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு கோழி பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் பெண் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரமடை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...